sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

/

கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : ஆக 30, 2025 12:17 AM

Google News

ADDED : ஆக 30, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூரில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

தமிழக முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 7,500 ஏக்கரில், 93.73 லட்சம் ரூபாய் மானியத்தில் பசுந்தாள் உரம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள், 1 கிலோ 50 சதவீத மானிய விலையில், 62.50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், 2025 - 26ம் ஆண்டு காரீப் பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு, 1,396 விவசாயிகள் 12,690 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து, விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், ஐந்து விவசாயிகளுக்கு 2.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் பால்ராஜ். தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துணை இயக்குநர் குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us