sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி கிளை சிறையில் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு

/

பொன்னேரி கிளை சிறையில் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு

பொன்னேரி கிளை சிறையில் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு

பொன்னேரி கிளை சிறையில் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு


ADDED : மே 03, 2025 11:18 PM

Google News

ADDED : மே 03, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கலெக்டர் பிரதாப் தலைமையில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நடுவர் மீனாட்சி மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட மாவட்ட பார்வையாளர் குழு ஆகியோர், பொன்னேரி கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

கிளைச் சிறையில் கைதிகளுக்கான குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், சுற்றுப்புற துாய்மை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என, கைதிகளிடம் கேட்டறிந்தனர்.

மருத்துவர்கள் வருகை பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, பாரா புத்தகம், சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையல் அறை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. சட்ட சேவை மையம், கைதிகளின் நேர்காணல் அறை, சுற்றுச்சுவர் பாதுகாப்பு, நுாலகம் உள்ளிட்டவைகளையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, பொன்னேரி ஆர்.டி.ஓ., கனிமொழி, பொன்னேரி போலீஸ் உதவி கமிஷனர் சங்கர், திருவள்ளூர் சார்பு நீதிபதி சதீஷ்குமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us