sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேரம்பாக்கம் ஏரியில் விதிமீறி மணல் அள்ளுவதாக புகார் மனு

/

பேரம்பாக்கம் ஏரியில் விதிமீறி மணல் அள்ளுவதாக புகார் மனு

பேரம்பாக்கம் ஏரியில் விதிமீறி மணல் அள்ளுவதாக புகார் மனு

பேரம்பாக்கம் ஏரியில் விதிமீறி மணல் அள்ளுவதாக புகார் மனு


ADDED : செப் 02, 2025 12:23 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் பேரம்பாக்கம் ஏரியில் விதி மீறி மணல் அள்ளுவதாக, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பேரம்பாக்கம் பகுதி மக்கள் சார்பாக, சமூக ஆர்வலர் வசந்தகுமார் என்பவர், நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பேரம்பாக்கம் பொதுப் பணி துறைக்குச் சொந்தமான ஏரியில், சவுடு மண் குவாரி, கடந்த மாதம் 7ம் தேதி முதல் இயங்கி வருகிறது. அனுமதி வாங்கிய இடம் மற்றும் அதற்கு அருகில் உள்ள அனுமதி பெறாத இடங்களிலும், அதிகளவில் மண் மற்றும் மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு அனுமதித்த 3 அடி ஆழத்தை மீறி, சட்ட விரோதமாக, 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு, அங்கு கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படும். எனவே மண் குவாரியில், ஆய்வு செய்து, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

-----------------






      Dinamalar
      Follow us