sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கான்கிரீட் பெயர்ந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

/

கான்கிரீட் பெயர்ந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

கான்கிரீட் பெயர்ந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

கான்கிரீட் பெயர்ந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி


ADDED : ஜன 08, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 08, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்னநாகபூண்டி கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், சித்துார் நெடுங்சாலையில் அம்மன் கோவில் எதிரே உள்ள அரசு தொடக்க பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தை ஒட்டி, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம், வேளாண் துறை அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இதே பகுதியில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் துாண்களில் கான்கிரீட் பெயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த துாண்கள் வலுவிழந்து வருகின்றன. இதனால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

சின்ன நாகபூண்டி கிராமத்தின் முக்கிய பகுதியான இங்கு, பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகள் அதிகளவில் நடமாடும் நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது. பாதுகாப்பு கருதி, இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us