sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் ரூ.13.27 கோடியில் கான்கிரீட் சாலை பணி துவக்கம்

/

திருத்தணியில் ரூ.13.27 கோடியில் கான்கிரீட் சாலை பணி துவக்கம்

திருத்தணியில் ரூ.13.27 கோடியில் கான்கிரீட் சாலை பணி துவக்கம்

திருத்தணியில் ரூ.13.27 கோடியில் கான்கிரீட் சாலை பணி துவக்கம்


ADDED : ஆக 28, 2025 01:36 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் சேதமடைந்த கான்கிரீட் சாலைகள், 13.27 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளால், சாலைகள் முழுதும் சேதமடைந்துள்ளன. அதாவது, 350க்கும் மேற்பட்ட கான்கிரீட் மற்றும் தார்ச்சாலைகள் சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

முதற்கட்டமாக, சேதமடைந்த கான்கிரீட் சாலைகளை சீரமைப்பதற்கும், மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கும் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 13.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று, திருத்தணி நகராட்சியின் இரண்டாவது வார்டு ஏரிக்கரை தெருவில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் பாலசுப்பிரமணியம், துணை தலைவர் சாமிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

'திருத்தணி நகராட்சியில், 186 கான்கிரீட் சாலைகள் மூன்று மாதத்தில் சீரமைக்கப்படும்' என, நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us