ADDED : டிச 12, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ‛நுகர்வோர் என்பவர் யார், நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த பதாகை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கியமான வீதிகளில் சென்றனர்.
பேரணியில் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.