sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு

/

சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு

சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு

சமையல் உதவியாளர் பணி: 300 பேர் பங்கேற்பு


ADDED : ஜூன் 18, 2025 08:02 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களில், 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலி பணியிடங்களுக்கு, நான்கு ஒன்றியத்தில் இருந்து, 900 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு நேர்காணல், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.

முதல் நாளான நேற்று, 300 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பஞ்சு உள்ளிட்டோர் சான்றுகள் சரிபார்ப்பு செய்து, நேர்காணல் நடத்தினர். இன்றும், நாளையும் நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us