sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 குறுங்காடாக மாறி வரும் கூவம் ஆறு: நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்

/

 குறுங்காடாக மாறி வரும் கூவம் ஆறு: நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்

 குறுங்காடாக மாறி வரும் கூவம் ஆறு: நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்

 குறுங்காடாக மாறி வரும் கூவம் ஆறு: நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்


ADDED : நவ 17, 2025 12:35 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரண்வாயல்: அரண்வாயல் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து குறுங்காடாக மாறியுள் ளது. இதை, நீர்வள துறையினர் துார்வாராமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, மணவாள நகர், அரண்வாயல் வழியாக, சென்னை நேப்பியார் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

இதில், பேரம்பாக்கம், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூவம் ஆற்றில் கருவேல மரங்கள் வளர்ந்து, காடு போல காட்சியளிக்கிறது.

மேலும், கூவம் ஆற்றில் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதை அகற்ற, நீர்வள ஆதாரத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூவம் ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us