/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை மைய தடுப்பில் மேயும் மாடுகளால் விபத்து அபாயம்
/
சாலை மைய தடுப்பில் மேயும் மாடுகளால் விபத்து அபாயம்
சாலை மைய தடுப்பில் மேயும் மாடுகளால் விபத்து அபாயம்
சாலை மைய தடுப்பில் மேயும் மாடுகளால் விபத்து அபாயம்
ADDED : டிச 15, 2025 05:27 AM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையின் மைய பகுதியில் உள்ள புற்களை மேய வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது. இச்சாலை வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட், மாதர்பாக்கம், ஆந்திர மாநிலம் சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையின் பல்வேறு இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. நெடுஞ்சாலையில் தஞ்சமடையும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குருத்தானமேடு - பூவலம்பேடு வரையிலான சாலையில் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. சாலையின் மைய பகுதியில் உள்ள புற்களை மேய்வதற்காக வரும் மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் போது, வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர்.
எனவே, மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்து, மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலை துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

