sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

/

வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

வேளகாபுரத்தில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூன் 06, 2025 02:44 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் வேளகாபுரம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, ஆரணி ஆற்றை ஒட்டி சுடுகாடு இருந்தது.

இந்த சுடுகாட்டிற்கு வழி இல்லாததால், வயல்வெளியில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வந்தது. இதனிடையே, தனிநபர் ஒருவர் சுடுகாடு அமைக்க இடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், ஒவ்வொரு முறையும் கிராமத்தில் உள்ளவர்கள் யாராவது இறந்தால், சடலத்தை எடுத்து செல்வதில் தகராறு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, ரோஸ், 70, என்பவர் வயது மூப்பு காரணமாக இறந்தார்.

வழக்கம் போல, சுடுகாடு தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி., சாந்தி மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தியதில், மேட்டுபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை எரிப்பதாக முடிவு செய்யப்பட்டு, நேற்று இரவு 7:30 மணி சடலத்தை எரித்தனர்.






      Dinamalar
      Follow us