/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : டிச 06, 2025 06:32 AM

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதோடு நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை கடந்த 2014-ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2018-ம் ஆண்டில் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் நசரத்பேட்டை முதல் ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரை 14 கி.மீ., ஆறு வழிச்சாலை பணி 2023ல் நிறைவடைந்தது.
தற்போது இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, செட்டிபேடு, நசரத்பேட்டை உட்பட பல பகுதிகளில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

