sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை வளைவில் நிறுத்திய பறிமுதல் லாரியால் அபாயம்

/

சாலை வளைவில் நிறுத்திய பறிமுதல் லாரியால் அபாயம்

சாலை வளைவில் நிறுத்திய பறிமுதல் லாரியால் அபாயம்

சாலை வளைவில் நிறுத்திய பறிமுதல் லாரியால் அபாயம்


ADDED : ஏப் 21, 2025 02:25 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த கொள்ளுமேடு செல்லும் சாலையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஆற்று மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் எதிரில், சாலை வளைவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது, விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us