/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெமு விரைவு ரயில்களை மணவூரில் நிறுத்த வலியுறுத்தல்
/
மெமு விரைவு ரயில்களை மணவூரில் நிறுத்த வலியுறுத்தல்
மெமு விரைவு ரயில்களை மணவூரில் நிறுத்த வலியுறுத்தல்
மெமு விரைவு ரயில்களை மணவூரில் நிறுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 11:20 PM
திருவாலங்காடு,
சென்னையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மெமு விரைவு ரயில்களை, மணவூர் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
மெமு எனப்படும் குறுகிய துாரம் செல்லும் பயணியர் ரயில்கள், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து அரக்கோணம் வரை, தினமும் 200க்கும் மேற்பட்ட மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் அருகே உள்ள மணவூர் ரயில் நிலையத்தில் இருந்து, மெமு மின்சார ரயில்களில், தினமும் 30,000க்கும் மேற்பட்டோர், சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் வாயிலாக பயணிக்கின்றனர்.
மணவூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான புறநகர் ரயில்கள் நிறுத்தி இயக்கப்படும் நிலையில், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில், சென்னையில் இருந்து மாலை 5:45 மற்றும் 7:30 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில்கள், மணவூரில் நிறுத்தப்படுவதில்லை.
இதனால், மணவூரில் இறங்க வேண்டிய பயணியர், திருவள்ளூர் அல்லது திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு சென்று, திரும்பிவர வேண்டிய நிலை உள்ளது.
இதனால், 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நேர விரையம் ஏற்படுவதாக பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மணவூர் ரயில் நிலையத்தில், மேற்கண்ட இரண்டு மெமு விரைவு ரயில்களை நிறுத்தி இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.