sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

/

திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்


ADDED : ஆக 11, 2025 12:42 AM

Google News

ADDED : ஆக 11, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் காவடி களுடன் குவிந்தனர். அவர்கள் பொது வழியில், 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் மூலவரை தரிசிக்க, மலைக்கோவிலில் காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து மூலவரை தரிசித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

மேலும் நுாறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

முன்னதாக மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. கடந்த மாதம், 17ம் தேதி துவங்கிய ஆடி மாத விழா தற்போது நடந்து வருகிறது. முதல் ஞாயிற்றுக் கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.

நேற்று நான்காவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றனர்.






      Dinamalar
      Follow us