/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஏப் 14, 2025 01:19 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று வார விடுமுறை நாள் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் அதிகாலை முதலே குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்து மூலவரை தரிசித்தனர்.
இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.