sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு

/

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு


ADDED : செப் 08, 2025 01:50 AM

Google News

ADDED : செப் 08, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:முருகன் கோவிலில் சந்திர கிரகணத்திலும் நடை மூடாததால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், மூலவரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சிலர் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டன.

ஆனால், வழக்கம்போல திருத்தணி முருகன் கோவில், காலை 6:00 - இரவு 8:45 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.






      Dinamalar
      Follow us