sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

/

கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை


ADDED : ஜூலை 26, 2025 07:52 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள், அரசு ஐ.டி.ஐ.,யில் சேர நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூரில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், டெக்னீசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நெட்வொர்க் மெயின்டனன்ஸ், லிப்ட் அண்டு எஸ்கலேட்டர் மெக்கானிக், பிளம்பர் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு, 2025ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையமானது, கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு தாரர்களுக்கு மட்டுமே. எட்டு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர், அனைத்து சான்றிதழ்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம்.

பயிற்சியாளர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவியும் கிடைக்கும். மேலும், விபரங்களுக்கு 87784 52515, 82483 33532 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us