sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகள்; இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி பயணம்

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகள்; இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி பயணம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகள்; இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி பயணம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகள்; இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி பயணம்


ADDED : அக் 01, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:மப்பேடு ஏரியில் இருந்து சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு பெரிய ஏரியில் அரசு உத்தரவுப்படி, சில நாட்களாக சவுடு மண் அள்ளப்பட்டு, லாரிகள் வாயிலாக நெடுஞ்சாலை பணி உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் மண்ணை மலைபோல் குவித்து செல்கின்றன.

இதனால் நெடுஞ்சாலையில் சவுடு மண் சிதறி கொண்டே செல்வதால் பரவும் துாசி மற்றும் சிதறும் துகள்களால், நடந்து செல்வோர் மற்றும் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

காவல் துறையினர் எச்சரித்தும் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் தார்ப்பாய் போடாமல் செல்வது தொடர்ந்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us