/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
/
மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
ADDED : அக் 14, 2025 12:20 AM
சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரி மற்றும் ரோட்டரி 3233 மாவட்ட நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்ட அளவில் 'ஒலிம்பியாட் - 2025' விளையாட்டு போட்டியை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடத்தின. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் என இரு பிரிவில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இ தில் ப ள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டியின் ஆண்கள் பிரிவில் எபினேஷர் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., அணியும், ஒட்டுமொத்த சாம் பியன் பட்டத்தை கைப்பற்றின.
கல்லுாரிகளுக்கான கூடைப்பந்தில் சென்னை ஐ.ஐ.டி., அணி முதல் இடத்தையும், ஒய்.எம்.சி.ஏ., அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
எறிபந்து போட்டியில், பெண்கள் பிரிவில் வேலம்மாள் மெயின் அணி முதலிடத்தையும், ஆண்கள் பிரிவில் எத்திராஜ் கல்லுாரி அணி முதலிடத்தையும் பெற்றன.
கோ - கோ போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., அணி ஆண்கள் பிரிவிலும், ராணிமேரி அணி பெண்கள் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.