sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது

/

ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது

ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது

ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது


ADDED : ஆக 16, 2025 12:29 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:மது அருந்தி கொண்டிருந்த முதியவரை தனியாக அழைத்துச் சென்று, கொலை செய்து, அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் கோபால், 68; காவலாளி. காமராஜர் நகர் பகுதியில் உள்ள மதுபான கூடத்தில், நேற்று முன்தினம் மதியம் மது அருந்தி கொண்டிருந்தார்.

அவரது சட்டை பையில் பணம் இருப்பதை, அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சீனு, 28, ஆவடி, ஸ்ரீ தேவி நகரைச் சேர்ந்த விஜயகுமார், 32, இருவரும் நோட்டமிட்டனர்.

பின், கோபாலிடம் பேச்சு கொடுத்து, அவரை ஆவடி, சேர்க்காடு அருகே அழைத்துச் சென்று, மூவரும் ஒன்றாக மது அருந்தினர்.

அப்போது, கோபால் தனக்கு மட்டும் அதிகமாக மது ஊற்றிக்கொண்டதாக கூறி, அவரது முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தினர். நிலை குலைந்து விழுந்த கோபால், அங்கேயே உயிரிழந்தார்.

பின், கோபாலிடம் இருந்த, 2,000 ரூபாயை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பினர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி போலீசார் வழக்கு பதிந்து, 2,000 ரூபாய்க்காக முதியவரை கொலை செய்த, சீனு, விஜயகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us