ADDED : ஜன 05, 2025 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த, மத்துார் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள், 84; இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே அடுப்பில் சுடு தண்ணீர் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பிடித்து எரிந்ததில், கமலம்மாள் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதும், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.