/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எட்டிக்குப்பம் ஏரி ஆக்கிரமிப்பு தண்ணீரின்றி வறண்ட அவலம்
/
எட்டிக்குப்பம் ஏரி ஆக்கிரமிப்பு தண்ணீரின்றி வறண்ட அவலம்
எட்டிக்குப்பம் ஏரி ஆக்கிரமிப்பு தண்ணீரின்றி வறண்ட அவலம்
எட்டிக்குப்பம் ஏரி ஆக்கிரமிப்பு தண்ணீரின்றி வறண்ட அவலம்
ADDED : அக் 21, 2024 02:34 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சி, மேல்எட்டிக்குப்பம் ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி நீர்பாசனத்தை நம்பி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், வேர்க்கடலை மற்றும் கரும்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும், ஏரியில் தண்ணீர் நிரம்பினால், ஆறு மாதம் வரை ஏரி பாசனத்தை கொண்டு நெல் பயிரிடுவர். இதுதவிர, விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இந்த ஏரியை திருத்தணி நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். சில ஆண்டுகளாக ஏரியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன. ஏரியில் விவசாயம் செய்வது, செங்கல் சூளை அமைப்பது போன்ற ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன.
மேலும், நீர்வரத்து கால்வாயை சீரமைக்காததால், மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பருவமழை பெய்யும் போது, ஏரிக்கு மழைநீர் வரத்து இல்லாததால், இரண்டு ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.
ஏரியில் செடிகள் மற்றும் சாரை புல் அதிகளவில் வளர்ந்துள்ளன. ஏரியின் மதகும் சேதடைந்துள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றிவிட்டு, மதகை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

