/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கன அடியாக குறைப்பு
/
பூண்டியில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கன அடியாக குறைப்பு
பூண்டியில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கன அடியாக குறைப்பு
பூண்டியில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கன அடியாக குறைப்பு
ADDED : அக் 19, 2025 07:26 PM
ஊத்துக்கோட்டை: பூண்டியில் இருந்து வினாடிக்கு, 4,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது மழை பெய்யாததால், 2,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.
தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து உள்ளிட்ட காரணங்களால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. மழைநீர் வினாடிக்கு, 2,000 கன அடி, கிருஷ்ணா நீர், 300 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 15ம் தேதி இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு, 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மறுநாள், மேலும் இரண்டு மதகுகள் திறந்து, 4,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இரு நாட்களாக மழை பெய்யாத நிலையில், 2,000 கன அடி நீராக குறைக்கப்பட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி நீர்மட்டம், 33 அடியாக உள்ளது. கிருஷ்ணா நீர், 340 கன அடி, மழைநீர், 2,000 கன அடி என, மொத்தம் 2,340 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மதகு வாயிலாக, 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இணைப்பு கால்வாய் வாயிலாக, 700 கன அடி நீர் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது என, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.