sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி

/

பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி

பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி

பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி


ADDED : அக் 02, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி, தொழிற்சாலை உரிமையாளர் உயிரிழந்தார்.

ஆவடி கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ், 44. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

அம்பத்துார் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

கடந்த, 30ம் தேதி இரவு அரக்கோணம் சென்று விட்டு திருவள்ளூர் வழியாக, பல்சர் இருசக்கர வாகனத்தில் ஆவடி வந்து கொண்டிருந்தார்.

திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் நாராயணபுரம் கூட்டு சாலை பகுதியில் வந்தபோது, திருத்தணி நோக்கி வந்த மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சாமுவேல்ராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us