sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பனப்பாக்கம் ஏரி கலங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

/

பனப்பாக்கம் ஏரி கலங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பனப்பாக்கம் ஏரி கலங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பனப்பாக்கம் ஏரி கலங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : டிச 07, 2024 01:47 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பு பாசன ஏரி உள்ளது. இதில் தேங்கும் மழைநீர், 300 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது.

இந்த ஏரி சுற்றிலும் கரை கொண்டதாக அமைந்து உள்ளது. அருகில் உள்ள மேய்க்கால் நிலப்பகுதியில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, வரத்து கால்வாய் வழியாக கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரி நிரம்பியதை தொடர்ந்து, கலங்கல் நிரம்பி வழிகிறது.

மேற்கண்ட கலங்கலின் அடிப்பகுதியில் ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் இருப்பதால், அதன் வழியாகவும் மழைநீர் வீணாவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீர்வளத்துறையினர் மேற்கண்ட ஏரியின் கலங்கல் பகுதியை புதுப்பித்து, மழைநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us