/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
/
திருவள்ளூரில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 09:28 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை காலை 11:00 மணியளவில் நடக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே, திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.