sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி

/

தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி

தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி

தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி


ADDED : டிச 12, 2024 11:30 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி தாலுகா, சத்திரஞ்ஜெயபுரம், வேலஞ்சேரி, தாழவேடு, கோபாலபுரம், அருங்குளம், பட்டாபிராமபுரம், விநாயகபுரம், நெமிலி பொன்பாடி உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், கோழிக் கொண்டை போன்ற பல்வேறு பூ பயிரிட்டுள்ளனர்.

விவசாயிகள், தினமும் காலை முதல், மதியம் வரை பூந்தோட்டத்தில் பூக்கள் பறித்து, திருத்தணி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

மேலும், தொடர்மழை பெய்து வருவதால், பூக்கள் செடியிலேயே அழுகிவிடுகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர். ஒரு சில விவசாயிகள் கொட்டும் மழையிலும், குடைகள் மற்றும் ரெயின்கோர்ட் அணிந்து பூ பறித்தனர்.






      Dinamalar
      Follow us