/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்
/
மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்
ADDED : ஜூலை 13, 2025 10:42 PM
ஆரணி,:மகள் சாவில் சந்தேகம் இருப்பதால், கணவர் குடும்பத்தினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆரணி போலீசில் தந்தை புகார் அளித்தார்.
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் வசித்தவர் முரளி மனைவி தனலட்சுமி, 30. இரு நாட்களுக்கு முன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஊத்துக்கோட்டை அடுத்த தர்மபுரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமியின் தந்தை ரகு, ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
இரு மாதங்களுக்கு முன் முரளி குடும்பத்தினர், தனலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். வீட்டிற்கு வந்த தனலட்சுமியிடம், 5 சவரன் தாலி செயின் வழங்கி, மருமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.
இந்நிலையில், தனலட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, முரளி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதால், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வழக்கு பதிந்த ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

