UPDATED : மே 27, 2025 08:33 PM
ADDED : மே 27, 2025 08:14 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கசத்திரம் காலனியில் கங்கையம்மன் ஜாத்திரை
விழா நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு சக்தி அம்மன் மற்றும் கிராம
தேவதைகளுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில்
கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு,
7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில்,
பூங்கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு,
10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில்,
மாம்பாக்கசத்திரம் காலனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான
பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாலங்காடு
திருவாலங்காடு சாலையில் உள்ள கங்கையம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
மதியம் 1:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, பன்றி காவு கொடுக்கப்பட்டு பின் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
மாலை,
6:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு
அலங்காரத்துடன், பூங்கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள்
பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.