/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலி மனையில் குவியும் குப்பை: குடியிருப்பு மக்கள் அவதி
/
காலி மனையில் குவியும் குப்பை: குடியிருப்பு மக்கள் அவதி
காலி மனையில் குவியும் குப்பை: குடியிருப்பு மக்கள் அவதி
காலி மனையில் குவியும் குப்பை: குடியிருப்பு மக்கள் அவதி
ADDED : நவ 28, 2025 03:28 AM

மணவாளநகர்: மணவாளநகர் பகுதியில் காலி மனைகளில் குவிந்து வரும் குப்பையால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்குள்ள கபிலர் நகர் பகுதியில் விவேகானந்தர் தெருவில் உள்ள காலி மனைகளில் பகுதியில் சேகரமாகும் குப்பை சேகரமாகி வருகிறது.
தற்பாது இந்த குப்பையுடன் மழை நீரும் கலந்து கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதிவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் காலி மனைகளில் குப்பை தேங்குவதை கட்டுப்படுத்தவும் தேங்கிய குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

