/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : பிப் 11, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், மாநில கலை திருவிழாவில், வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் சமீபத்தில், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற 36 மாணவ - மாணவியருக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும், திருச்சியில் நடைபெற்ற ஜாம்பூரி மாநாட்டில் பங்கேற்ற 16 மாணவ - மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உடன், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.