sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தண்ணீரில் தத்தளிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி

/

தண்ணீரில் தத்தளிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி

தண்ணீரில் தத்தளிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி

தண்ணீரில் தத்தளிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி


ADDED : டிச 14, 2024 01:49 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி.

இங்கு இப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர், 1 - 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவ - மாணவியர் தண்ணீர் தேங்காத வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.

இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த பள்ளி வகுப்பறை உட்பட பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டவும் மழைநீர் தேங்காத வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us