sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் மீது பஸ் மோதல் அரசு பள்ளி ஆசிரியர் பலி

/

பைக் மீது பஸ் மோதல் அரசு பள்ளி ஆசிரியர் பலி

பைக் மீது பஸ் மோதல் அரசு பள்ளி ஆசிரியர் பலி

பைக் மீது பஸ் மோதல் அரசு பள்ளி ஆசிரியர் பலி


ADDED : ஜன 08, 2025 07:52 PM

Google News

ADDED : ஜன 08, 2025 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, சிறுவானுார் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் பாஸ்கர், 52; திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு, கிருஷ்ணவேணி, 50, என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், ஐ.சி.எம்.ஆர். அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஊத்துக்கோட்டையிலிருந்து, திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us