/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் மீது பஸ் மோதல் அரசு பள்ளி ஆசிரியர் பலி
/
பைக் மீது பஸ் மோதல் அரசு பள்ளி ஆசிரியர் பலி
ADDED : ஜன 08, 2025 07:52 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, சிறுவானுார் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் பாஸ்கர், 52; திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு, கிருஷ்ணவேணி, 50, என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், ஐ.சி.எம்.ஆர். அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஊத்துக்கோட்டையிலிருந்து, திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.