/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 29, 2025 07:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில் நேற்று, 38வது பட்டமளிப்பு விழா கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தலைமையில் நடந்தது.
இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, 1,900 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். மதியம் கல்லுாரியின் ஆண்டு விழா நடந்தது.
தொடர்ந்து, தளபதி மகளிர் கலைக் கல்லுாரியின் முதல்வர் வேதநாயகி பங்கேற்று, கல்லுாரி அளவில் முதல் இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கினார்.