/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைதீர் கூட்டம் 465 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டம் 465 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 05, 2025 11:57 PM
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்த மக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி மனுக்கள் அளித்தனர்.
அதில், நிலம் சம்பந்தமாக - 126, சமூக பாதுகாப்பு திட்டம் - 105, வேலைவாய்ப்பு கோரி - 96, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி - 86 மற்றும் இதர துறை - 52 என, மொத்தம் 465 மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.