sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விவசாயி மனுக்களுக்கு முக்கியத்துவம் சப் - கலெக்டர் அறிவுறுத்தல்

/

விவசாயி மனுக்களுக்கு முக்கியத்துவம் சப் - கலெக்டர் அறிவுறுத்தல்

விவசாயி மனுக்களுக்கு முக்கியத்துவம் சப் - கலெக்டர் அறிவுறுத்தல்

விவசாயி மனுக்களுக்கு முக்கியத்துவம் சப் - கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : மார் 15, 2024 08:05 PM

Google News

ADDED : மார் 15, 2024 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் வாகே சங்கேத் பலவந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய், மீன்வளம், வேளாண், காவல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு கோரிக்கை குறித்து தெரிவித்தனர்.

மேலும், ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் உள்ள நன்னீர் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும்.

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து, 48 மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட, 52 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

கூட்ட முடிவில், 'விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும்.

'மனுதாரர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும்' என அனைத்து துறை அலுவலர்களுக்கு சப்-கலெக்டர் அறிவுத்தினார்.






      Dinamalar
      Follow us