/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர அழைப்பு
/
நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர அழைப்பு
ADDED : செப் 06, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:''திருத்தணி முருகன் கோவில் சார்பில் நடத்தப்படும் தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்,” என, இணை ஆணையர் ரமணி அறிவித்துள்ளார்.
திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், நடப்பாண்டில் மாணவர்கள் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள மாணவர்கள், web:https://hree.tn.gov.in மற்றும் tiruttanimurugan.hree.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோவில் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என, இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.