sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி மாணவனை வெட்டியவருக்கு சிறை

/

பள்ளி மாணவனை வெட்டியவருக்கு சிறை

பள்ளி மாணவனை வெட்டியவருக்கு சிறை

பள்ளி மாணவனை வெட்டியவருக்கு சிறை


ADDED : மார் 05, 2024 06:28 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பார்த்திபன், 16. இப்பகுதியில் உள்ள கிரைஸ்ட் கிங் என்ற தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

கடந்த 2ம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துரத்தி சென்று பள்ளி அருகே வைத்து தலை, முதுகு, இடது கால் பகுதியில் சரமாரியாக வெட்டினர்.

படுகாயமடைந்த மாணவன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவனின் தாய் மைதிலி அளித்த புகார்படி வழக்கு பதிந்த, மணவாள நகர் போலீசார் அதிகத்துார் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன், 19 மற்றும் புட்லுார் பகுதியை சேர்ந்த 16வயது சிறுவன் என இருவரை கைது செய்தனர். சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தமிழ்வாணனை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us