/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பம் கண்டிகை ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம்
/
குப்பம் கண்டிகை ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம்
ADDED : ஏப் 04, 2025 02:30 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை ஊராட்சியில் அரசு பள்ளி அருகே ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் விரிசல் அடைந்துள்ளது.
மேலும், மேற்தளம் சேதடைந்து உள்ளதால் மழையின் போது தண்ணீர் ஒழுகி, அலுவலகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதுதவிர, ஊராட்சி அலுவலகத்தில் கதவுகள் மற்றும் ஆவணங்கள் வைக்கும் அறைகளும் சேதம் அடைந்துள்ளதால், சில ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.
தற்போது, ஊராட்சி மன்ற அலுவலகம் மாற்று கட்டடத்தில் இயங்கி வருகிறது. பழுதடைந்த கட்டடத்தை இடித்து புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.