ADDED : ஜன 04, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, பனப்பாக்கம் கிராமத்தில், சாலையோரம் ஆண் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரிந்தது.
போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார். கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.