/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறு வயது சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது
/
ஆறு வயது சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது
ADDED : நவ 24, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: ஆறு வயது சிறுவனை கடத்தி சென்ற ஹிமாச்சல் நபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் அருகே, ஆறு வயது சிறுவன், வீட்டில் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, அங்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், சிறுவனை கடத்த முயன்றார். பாட்டி அலறல் சத்தத்தை கேட்ட மர்மநபர், சிறுவனை விட்டு விட்டு, அவரது பாட்டியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் ஹிமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்த அமீக் கவுண்டர், 48, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

