sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'பென்ஸ்' கார் மோதி 'புல்லட்'டில் சென்றவர் பலி

/

'பென்ஸ்' கார் மோதி 'புல்லட்'டில் சென்றவர் பலி

'பென்ஸ்' கார் மோதி 'புல்லட்'டில் சென்றவர் பலி

'பென்ஸ்' கார் மோதி 'புல்லட்'டில் சென்றவர் பலி


ADDED : நவ 03, 2025 10:26 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை: இ.சி.ஆரில், 'பென்ஸ்' கார் மோதி, 'புல்லட்'டில் சென்றவர் பலியானார்.

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 54. கொத்தனார். இவர், நேற்று மாலை, புல்லட் பைக்கில், நீலாங்கரையில் இருந்து மதுரவாயல் நோக்கி புறப்பட்டார். பின்னால், தன்னையா, 32, என்பவர் அமர்ந்திருந்தார்.

நீலாங்கரை, வைத்தியலிங்க சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பிய போது, கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி, அதிவேகமாக சென்ற பென்ஸ் கார், புல்லட்டில் மோதியது.

இதில், கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த தன்னையா, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரை ஓட்டிய நபர் மற்றும் அதில் இருந்த இரண்டு பேர் கல்லுாரி மாணவர்கள் எனவும், அவர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப் படுகிறது.

பொதுமக்கள் அவர்களை பிடித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us