/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
/
டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : ஜன 03, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு, 41. இவர் நேற்று காலை, 6:00 மணியளவில் வீட்டில் டீ குடித்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.