/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடியில் போன் பேச்சு தவறி விழுந்தவர் பலி
/
மாடியில் போன் பேச்சு தவறி விழுந்தவர் பலி
ADDED : ஜன 22, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன், 24; கார் மெக்கானிக். இவர், நேற்று காலை வீட்டின் மூன்றாவது மாடியில், மொபைல் போனில் பேசியபடி மாடியின் தடுப்பு சுவரில் அமர்ந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த தினகரனை, உறவினர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.