/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
படியில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
படியில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : மார் 18, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் காவாங்கொளத்துார் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுப்புராம்நாயுடு, 80. இவர், கடந்த 7ம் தேதி வீட்டின் மாடி படியில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, இவரது மகன் சதீஷ்பாபு அளித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.