/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
/
கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : செப் 08, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை பூண்டி ஒன்றியம் கலவை கிராமத்தில் வசித்து வந்தவர் மாரிமுத்து, 55. நேற்று இவர், அங்குள்ள ஏரியின் கால்வாய் மீது அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவர், கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
மேல்சிகிச்சைக்காக, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.