/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி
/
சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி
ADDED : நவ 24, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வடமாநில கட்டட தொழிலாளி, சரக்கு ஆட்டோ மோதி உயிரிழந்தார்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் யாதவ், 35. கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில் வசித்தபடி கட்டட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

