ADDED : நவ 17, 2024 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேல்,55. கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு, தெருவில் சிறிது நேரம் நடந்து சென்றார். அப்போது திடீரென முனிவேல் மயங்கி விழுந்தார்.
அவரது உறவினர்கள் உடனடியாக முனிவேலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், முனிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

