sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

/

தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : அக் 25, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சமடையும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சிப்காட் சாலை பிரியும் இடத்தில், ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இங்குள்ள காய்கறி மற்றும் பழக்கடைகளில் இரை தேடிய பின், தேசிய நெடுஞ்சாலையில் இளைப்பாறுகின்றன.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேம்பால இறக்கத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், மாடுகளை கண்டதும் தடுமாற்றம் அடைகின்றனர்.

பல சமயம், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர். மேலும், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us