sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாட்டுத்தொழுவமாக மாறிய சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

/

மாட்டுத்தொழுவமாக மாறிய சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

மாட்டுத்தொழுவமாக மாறிய சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

மாட்டுத்தொழுவமாக மாறிய சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : மே 23, 2025 03:11 AM

Google News

ADDED : மே 23, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:சென்னை, மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை, 2014-ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.

இதில், திருமழிசை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் இணைப்பு சாலை மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் சாலையில் தேங்கியுள்ள மாட்டுச்சாணத்தால் ஏற்படும் துர்நாற்றத்தால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் இணைப்பு சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதோடு, மழை நேரத்தில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us